ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள்
எல்லை தாண்டி வரும் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை மடிப்படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று எழுதப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் இன்று (11.06.2024) காலை தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் இணைந்தே இந்த கடிதத்தை எழுதியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை
அதேவேளை, இந்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/2367e731-a830-4a12-b36a-8461148b3ca1/24-66686d00074c5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f2a3bf77-757d-40bd-9d96-570fefbc4673/24-66686d0092cb5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/444fc9ee-56da-48e4-b0bc-c8fb80ca244d/24-66686d0116a4f.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/c712551a-40b9-417c-9f32-48ae0270920e/24-66686d018db06.webp)