வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிரடி நடவடிக்கை
வடக்கு மாகாணத்தில் வீதிகளில் சுற்றித் திரியும் கட்டாக்காலிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு, அதனையும் பொருட்படுத்தாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சீ.ஏ.தனபால தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட்டாக்காலி (அலைந்து திரியும்) மாடுகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.
எதிராக சட்ட நடவடிக்கை
இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்வதற்கு இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு வட மாகாணம் முழுவதும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு முதற்கட்ட நடவடிக்கையாக எச்சரிக்கை வழங்கப்படவுள்ளது.

அவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டும் கருத்தில் கொள்ளாத கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri