2 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது வடகொரியா: ஆராயும் ஐ.நா.
வட கொரியா பயிற்சி நடவடிக்கையாக இரண்டு ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்துள்ளது.
'ரொக்கெட் லோஞ்சர்' ஒன்றைச் சோதிப்பதற்கான பயிற்சியாவே இன்றைய தினம் (20.02.2023) இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிரிகளின் வான் தலங்களை அழித்துவிடக்கூடிய அணுவாயுத தாக்குதல்களை நடத்தக்கூடிய வலிமை இந்த ரொக்கெட் லோஞ்சர்களுக்கு உள்ளது என வடகொரியா குறிப்பிட்டுள்ளது.
வட கொரிய அரசாங்கம்
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையொன்றை நேற்று முன்தினம் (18.02.2023) வட கொரியா பயிற்சிக்காக ஏவியிருந்தது.
இந்த ஏவுகணை, ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார வலய கடற்பகுதியில் இறங்கியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களின் பின்னர், இன்றைய தினம் 2 ஏவுகணைகளை வட கொரியா ஏவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் தென் கொரியாவும் நேற்றைய தினம் (19.02.2023) நடத்திய கூட்டு வான்வழி பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாக வட கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல்
இவற்றில் ஒரு ஏவுகணை 390 கிலோமீற்றர் தூரம் சென்றதாகவும், மற்றொரு ஏவுகணை 340 கிலேமீற்றர் தூரம் சென்றதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வட கொரியாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், கொரியத் தீபகற்பத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் எனவும் தென் கொரியா குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென் கொரியா, கொரியத் தீபகற்பத்தின் அமைதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலைமை குறித்து ஆராய்வதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபை நாளைய தினம் (21.02.2023) கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



