கொரோனாவுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனையை கைவிடாத வடகொரியா!
வட கொரியா இன்று அதிகாலை மூன்று போல்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரிசோதைனை மேற்கொண்டதாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
பியோங்யோங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் இந்த மூன்று ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டதை அடுத்தே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகொரியா இந்த ஆண்டின் ஆரம்பித்தது முதல் பலதரப்பட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது.
இந்த பயணத்தின்போது வடகொரியாவின் எந்தவொரு செயலுக்கும் பதில் வழங்க அமெரிக்கா தயாராகவே உள்ளது என்று பைடன் கூறியிருந்தார்.
.இதேவேளை வடகொரியாவில் பெருமளவில் தடுப்பூசி போடப்படாத 25 மில்லியன் மக்களிடையே கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து மனிதாபிமான உதவியை வழங்குவதாக தென்கொரியா அறிவித்தபோதும், பியோங்யாங் இன்னும் பதிலளிக்கவில்லை.