அணுஆயுத சோதனையால் பதற்றம்! அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
ஐ.நா.சபை விதித்துள்ள தடையையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியினை தீவிரப்படுத்தியுள்ளன.
வடகொரியா தற்போது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
அணு ஆயுத சோதனை
இந்நிலையில் குறித்த பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் அவ்வப்போது பதற்றத்தை வடகொரியா ஏற்படுத்துத்திவருகிறது.

அமெரிக்காவுடனான கூட்டுப்போர் பயிற்சி காரணமாகவே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா இந்த நகர்வுகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையில், சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடுமையான பதிலடி
இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri