டக்ளஸின் நடவடிக்கையால் அவதியுறும் வடக்கு - கிழக்கு மீனவர்கள்! சாணக்கியன் காட்டம்
எமது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக வடக்கு - கிழக்கு மக்களைப் பொறுத்தவரையில் விவசாயத்தையும் மீன்பிடியையும் நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(R.Shanakkiyan) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"இலங்கை அரசின் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) இலங்கையில் இருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாததன் காரணத்தினால் இன்று வடக்கு கிழக்கில் வாழும் மீனவர்கள் மிகவும் அசௌகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,