பரிசளிப்பு விழாவிற்காக இங்கிலாந்து செல்லும் வடக்கு, கிழக்கு மாணவர்கள்(photos)
வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 3 மாணவர்கள் தேசிய கணித போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பயணமாகியுள்ளனர்.
போட்டி
நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட சிதம்பரா கணிதபோட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான, யசோதரன் மிதுலாஷன்,உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மணவனான சுகந்தன் சாகித்தியன் ஆகியோரே வெற்றி பெற்றுள்ளனர்.
பரிசளிப்பு விழா
இவர்கள் நாளை (25) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணித போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் நேற்று (23) இங்கிலாந்து சென்றுள்ளனர்.