அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு நோபல் பரிசு
தொடு உணர்வின் இரகசியங்களைக் கண்டறிந்தமைக்காக, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு, உடலியல் அல்லது மருத்துவத்திற்கான, 2021 நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உடலியல் நிபுணர் பேராசிரியர் டேவிட் ஜூலியஸ் மற்றும் கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோர், உயிர் வாழ முக்கியமான, சருமத்தில் வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் போன்ற உணர்வுகளைக் கண்டறிந்ததற்காக, இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டொக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் நோபல் சபையால் இன்று அறிவிக்கப்பட்ட இந்த விருது, 845,000 பவுண்ட்ஸ் மதிப்புடையது. இந்த தொகை வெற்றியாளர்களிடையே சமமாகப் பகிரப்படும்.
வெப்பநிலை மற்றும் இயந்திர சக்தியை உணருவதற்கான மூலக்கூறு அடிப்படையை விளக்கி இயற்கையின் இரகசியங்களின் ஒன்றான தொடு உணர்வு கண்டறியப்பட்டுள்ளது.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam