ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் புதிய கூட்டணி: தமிழ், முஸ்லிம் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன வலியுறுத்தியுள்ளன.
புதிய கூட்டணியை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இதில் டலஸ் அணி உறுப்பினர்களும் இணையவுள்ளதோடு சிலருக்கு பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இனவாதம் கக்குபவர்களுக்கும், கடும்போக்குவாதிகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரிடம் மேற்படி கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri