மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம்! மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்
மின் உற்பத்திக்கு தேவையான போதியளவு நீர்மட்டம் காணப்படுவதாகவும், நிலக்கரி இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை
அத்துடன் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் பொதுப்பாவனையாளர் ஆணையகத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த வாரத்தில் 1 மணித்தியால மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அந்த ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த மூன்றாம் திகதி முதல் மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படவில்லை. அதற்கு காரணம் தற்போது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையே என கூறியுள்ளார்.

நிலக்கரி பிரச்சினை
மேலும் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை. தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்வதற்கான சாதாகமான நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மின் உற்பத்திக்கான நிலக்கரி பிரச்சினை ஏற்படவில்லை எனில் ஒரு மணித்தியால மின் துண்டிப்பு கூட முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின் உற்பத்திக்கு தேவையான நீர் மட்டம் மற்றும் நிலக்கரி போதியளவு இருக்குமாயின் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் மின் துண்டிப்பை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்காது என அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri