இரசாயன உரங்களுக்காகப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை! - அரசாங்கம்
எந்த உரத்தையும் வழங்குமாறு கேட்ட விவசாயிகள் தற்போது இரசாயன உரங்களை மட்டுமே கேட்கிறார்கள் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தற்போது நேரம் இல்லை, அந்த உரங்களை இறக்குமதி செய்ய குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இரசாயன உரங்களுக்காக போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை,
சிலர் அதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர் என அமைச்சர் தெரிவிவித்துள்ளார். இந்த நேரத்தில் இரசாயன உரங்களுக்காகப் போராடுவதில் எந்தப் பயனும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கரிம உரங்களைப் பயன்படுத்துவதில் ஏற்படும் குறைபாடுகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று பொறுப்புடன் தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan