இலங்கையர்கள் தொடர்பில் அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடத்தப்பட்ட மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் பின்னர் நடந்த மோதல் சம்பவம் காரணமாக அந்த போட்டி நடத்தப்பட்ட மண்டபத்தை இனிவரும் காலங்களில் இலங்கையர்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்ச்சிகளுக்கு வழங்குவதில்லை என அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல்
கடந்த 21 ஆம் திகதி குறித்த மண்டபத்தில் நடந்த மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகிப்போட்டியின் போது இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் தலையிட்டு அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அழகியாக தெரிவு செய்யப்படட ஏஞ்சலியா குணசேகர
இந்த போட்டியில் மிஸ் ஸ்ரீலங்கா நியூயோர்க் அழகியாக ஏஞ்சலியா குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும் அழகிப்போட்டியில் கலந்துக்கொண்ட பெண்கள் இடையில் இந்த மோதல் ஏற்படவில்லை எனவும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தவர்கள் இடையில், மண்டபத்திற்கு வெளியில் மோதல் நடந்ததாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.