இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனினும் நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுமுறை நாட்களாக இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பல நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விநியோகம்
தற்போது எரிபொருள் பற்றாக்குறை இல்லை எனவும் வழமை போன்று எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் சில பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் தங்கள் வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
எனினும் இன்றையதினம் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan