ஈரான் குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை!
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கியதற்கான ஆதாரம் இல்லை என்றும் பிராந்தியத்தில் சமீபத்திய பதற்றங்கள் கூட ஈரானின் அணுசக்தி தளங்களை சீர்குலைக்கவில்லை என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின்(IAEA ) இயக்குநர் ரபேல் க்ரோஸி(Raphael Grossi) தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் கூற்றுக்கள்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஈரான் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் (uranium) இருப்புக்களை கொண்டிருப்பதாக சில அரசியல் கூற்றுக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதால், அந்த நாட்டில் அணு ஆயுதங்கள்(nuclear weapons) உள்ளன என்று அர்த்தமல்ல.
ஏஜென்சியைப் பொறுத்த வரை நிச்சயமாக, பொதுக் கருத்துக்களை வெளியிடும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். ஈரானிடம் அணு ஆயுதத் திட்டம் உள்ளது என்பதற்கான எந்த தகவலும் அல்லது அறிகுறிகளும் எங்களிடம் இல்லை.
ஈரானில் உள்ள எங்கள் ஆய்வாளர்கள் ஈரானிய அரசாங்கத்தால் அனைத்து அணுசக்தி தளங்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டதாகவும், ஆய்வுகளை தொடர நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது, ஆனால் எங்கள் ஆய்வாளர்கள் இன்று முதல் பணியைத் தொடங்குவார்கள்.
ஒப்பந்தம்
ஈரானுக்கும் ஏஜென்சிக்கும் இடையிலான ஒத்துழைப்பு நிலையானது. பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கொள்கைகள் மற்றும் ஒப்பந்தங்களை பாதுகாக்கிறது.
2015இல் கையொப்பமிடப்பட்ட கூட்டு விரிவான செயல் திட்டத்தில் (JCPOA) இருந்து அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக விலகியதற்கும், ஒப்பந்தத்தின் கீழ் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் ஐரோப்பியக் கட்சிகள் தாமதப்படுத்தியதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் தனது கடமைகளைக் குறைக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தது.
ஐ.நா-அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் 26 மற்றும் 36ஆவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பல கட்டங்களில் JCPOA இன் கீழ் ஈரான் தனது கடமைகளை குறைத்தது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
