தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்ற காரணிகள் முன்வைக்கப்படவில்லை
கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதால் மாத்திரம் அந்த வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற காரணிகள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தொற்று நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் அதனை பெற்றுக்கொள்ளாத அனைவரும் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அத்தியவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
மதுபானம் அருந்துதல் அல்லது புகைப்பிடித்தல் போன்ற பழக்கம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் தடையாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு, மருந்துகளை தயாரித்த ஆய்வு நிறுவனங்கள், விசேட மருத்துவ நிபுணர்கள் உட்பட எவரும் கூறவில்லை எனவும் மருத்துவர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan