கொழும்பில் வளி மாசடையவில்லை! ஆய்வில் வெளியான தகவல்
தலைநகர் கொழும்பில் வளி மாசடையவில்லை என விஞ்ஞான ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் வளியில் ஒட்சிசனின் அளவு சடுதியாக வீழ்ச்சிப் போக்கினை பதிவு செய்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் குறித்து ஆராயுமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் கோரியிருந்தார்.
வளி மாசடைதல் குறித்து ஆராய்ந்த விசேட குழு இன்றைய தினம் அதன் அறிக்கையை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
கொழும்பு நகரில் ஒட்சிசனின் அளவு குறையவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் அதிகளவு சனத்தொகை காணப்பட்டாலும் ஒட்சிசனின் அளவு வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியமில்லை எனவும் காலநிலை காரணிகளின் அடிப்படையில் வளியின் தரம் மாறுபடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri