புதிய நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வர்த்தமானி அறிவித்தல்
புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் தேசிய பட்டியலின் மூலம் உஷெட்டிகே டொன் நிஷாந்த ஜயவீர நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகியிருந்தார்.
தேர்தல் ஆணைக்குழு
குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் செயலாளர் ஜயவீரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியதையடுத்து, அதிகாரபூர்வமாக அவரை நாடாளுமன்றத்திற்கு நியமிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றிய டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, தனது பிரதி அமைச்சுப் பதவியையும், நாடாளுமன்ற உறுப்பினர்பதவியையும் விலக்கிக் கொண்டு, நிதி அமைச்சின் புதிய செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நிஷாந்த ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.

ஓமந்தையில் தனிநபரின் காணியினை அபகரிக்க முயற்சிக்கும் பொலிஸார் : வவுனியா பிரதேச செயலாளர் அதிரடி உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
