தொடருந்து மோதி ஒன்பது வயது குழந்தை பலி
மொரட்டுவை - முராவத்தை தொடருந்து கடவைக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது குழந்தையொன்று தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளதாக மொரட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையை சேர்ந்த நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம்.ஆர்.ரந்தரு என்ற குழந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடருந்து நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியினை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தை தொடருந்தில் மோதியதில், சுமார் 13 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |