இலங்கையில் அதிக ஆபத்தாக மாறியுள்ள கோவிட் தொற்று! இன்றும் ஒன்பது பேர் பலி
இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 687 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,699 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 109,846 பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 503 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரித்துள்ளது.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam