அரசியலிலிருந்து ஓய்வு பெறத் தயார்: நிமால் சிறிபால டி சில்வா
அரசியிலிலிருந்து தான் ஓய்வு பெற்றுக்கொள்ளத் தயார் என முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித தயக்கமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் தம்மோடு பயணிப்பவர்கள் தொடர்பிலான பொறுப்பு தமக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சகாக்கள்
மேலும், அரசியல் சகாக்கள் மற்றும் மக்களை கைவிடுவது சிரமமான தீர்மானம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதவி விலகுவதில் எவ்வித தயக்கமும் இல்லாத போதிலும் மக்களை கைவிட விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் எதிர்வரும் தேர்தலில் தாம் போட்டியிட வேண்டுமென பலர் விரும்புவதாகவும் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri