பூனைக்குட்டிகள் போன்று பதுங்கி இருந்த அரசியல் வாதிகள் எங்கே..! நிமல் காட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும், நாமல் ராஜபக்சவும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்த நிலையில் இப்போது நாய்களைப் போல குரைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியமை தொடர்பில், ஜனாதிபதியை, இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விமர்சித்தமை குறித்தே நிமல் லன்சா தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தனது சொந்த சிறிய தந்தை கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவையை நான்கு தடவைகள் மாற்றியமைத்த போது, எதுவும் கூறாத நாமல், ஜனாதிபதி விக்ரமசிங்க சில அமைச்சுக்களை மாற்றியமைத்த போது, ‘பயனற்ற சண்டி பேச்சுக்களை’ வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam