இலங்கையில் நங்கூரமிடப்பட்ட தென்கொரிய போர் கப்பல்
தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான 'குவாங்கெட்டோ தி கிரேட்' என்ற போர்க்கப்பலானது இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது இன்று (26.10.2023)கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
தெற்காசிய பங்குதாரர்களுடன் தி இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கைகள்
அத்தோடு, இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானதுடன் கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.
தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 6 வருடங்களுக்கு முன்பு கடைசியாக 2017 ஒக்டோபரில் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பல் நங்கூரமிடப்படும் போது இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 13 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
