இந்திய - தமிழக அரசியலில் ஈழத்தமிழர்கள் நினைப்பது நடக்காது! துலங்கும் மர்மம்
இந்திய - தமிழக அரசியலில் ஈழத்தமிழர்கள் நினைப்பது நடக்காது என இலங்கையிலுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் தனது கருத்தை வெளிப்படுத்தும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களில் ஒரு பகுதியினரிடம் ஒரு கருத்து நிலவுகிறது. இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கொன்று எதிரான நாடுகள். எனவே சீனா இலங்கையில் தலையீடு செய்யும் போது அது இந்தியாவிற்கு பிடிக்காது.
அப்படியான நேரத்தில் இந்தியா தமிழ் மக்களை நோக்கி நெருங்கி வரும். அல்லது குறைந்தபட்சம் இந்தியா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்கும் என்று எண்ணுகின்றனர்.
உண்மை என்னவென்று சொன்னால் இது தமிழ் மக்களின் விருப்பம் மாத்திரமே. ஆனால் இது தான் உண்மையான நிலையா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
சீனாவுடன் பிரச்சினை இருப்பதாக இந்தியா வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை என்பதே உண்மை. இதற்கு முதலாவது காரணம் சீனாவை பகிரங்கமாக எதிர்க்க இந்தியா விரும்பவில்லை, இரண்டாவது இந்தியா சீனாவை எதிர்க்க முடியாமல் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் புதிய முதலமைச்சர் பதவியேற்றுள்ள நிலையில் இந்திய - தமிழக அரசியலின் ஊடாக ஈழத்தமிழர்கள் நினைப்பது நடக்குமா என வினவியபோது, தன்பலம் இழந்து வெளியாருக்காக காத்திருப்பதில் பலனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.