இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகம் : எழுந்துள்ள சர்ச்சை
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஏவுகணையில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என அவர் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
36 ஆயிரம் பேர் பலி
இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் படையினர் இடையே கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
இதுவரை 36 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த நிக்கிஹாலே 53 போட்டியிடுகிறார்.
இவர் சமீபத்தில் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் அங்கு இராணுவ தளபாடங்களை பார்வையிட்டு அங்குள்ள ஏவுகணை ஒன்றில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என இஸ்ரேலுக்கு ஆதரவாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
