களியாட்ட நிகழ்வில் அதிக ஒலியுடன் ஒலிப்பெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது(Video)
களியாட்ட நிகழ்வொன்றில் அதிக ஒலியுடன் ஒலிப்பெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் (18.02.2023) களியாட்ட நிகழ்வு ஒன்றில் இவ்வாறு அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்றல் நடவடிக்கை மற்றும் நோயாளருக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் ஒலிப்பெருக்கியை ஒலிகச் செய்த குற்றச்சாட்டில் ஒலிபெருக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் ஒலிப்பெருக்கிச் சாதன பொருட்கள் அனைத்தும் பொலிஸாரால் பறிமுதல்
செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி. எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.