விசா இன்றி தங்கியிருந்த நைஜீரிய பிரஜை கைது
விசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டு பிரஜையை மிரிஹான பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த நபர் நேற்று மதியம் கங்கொடவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கங்கொடவில பிரதேசத்தில் வீடொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 40 வயதான நைஜீரிய பிரஜையிடம் இருந்து மடிக்கணனி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர் ஏதேனும் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
