அடுத்த மாதம் இலங்கையில் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
அடுத்த மாதம் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல் நினோ நிலை பலவீனமான நிலையிலிருந்து மிதமான நிலைக்கு வளர்ந்து வருகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கவனம் தேவைப்படும் அளவில் வெப்பக் குறியீடு
இதேவேளை, இன்றைய தினம் (26.07.2026) கிழக்கு மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வெப்பக் குறியீடு கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri