பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோன்
பொலிஸ்மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வருகின்றது.
கருத்து முரண்பாடு
பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்தது. எனினும், அண்மையில் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக நியமனம் காலம் தாழ்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியல் அமைப்பு பேரவை அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri