நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கொன்று இன்று காலை உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனத்தின் கிரிஷ் கட்டிடம் தொடர்பான வழக்கே இவ்வாறு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவதுருகொட முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக, முன்னர் கோரப்பட்ட பல ஆவணங்கள் அரசு தரப்பு பிரதிவாதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை றக்பி வளர்ச்சிக்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை நாமல் ராஜபக்ச முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam