பாக்கு நீரிணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இடைமறிப்பு
இந்திய கடற்படை, பாக்கு நீரிணை பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால், குறித்த படகு கண்காணிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணை பகுதி
பலமுறை எச்சரித்தும், படகு நிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஒருவருக்கு காயம்
இதனால் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவருக்கு, கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், அழைத்து செல்லப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
