பாக்கு நீரிணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இடைமறிப்பு
இந்திய கடற்படை, பாக்கு நீரிணை பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால், குறித்த படகு கண்காணிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணை பகுதி

பலமுறை எச்சரித்தும், படகு நிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஒருவருக்கு காயம்
இதனால் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவருக்கு, கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், அழைத்து செல்லப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam