பாக்கு நீரிணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று இடைமறிப்பு
இந்திய கடற்படை, பாக்கு நீரிணை பகுதியில் இன்று சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை இடைமறித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலால், குறித்த படகு கண்காணிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணை பகுதி
பலமுறை எச்சரித்தும், படகு நிறுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கமான நடைமுறைகளின்படி, படகை நிறுத்த எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
ஒருவருக்கு காயம்
இதனால் சந்தேகத்திற்கிடமான படகில் இருந்த பணியாளர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவருக்கு, கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், அழைத்து செல்லப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, என இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
