இலங்கையில் அவசர நிலையை எதிர்கொள்ள விசேட ஏற்பாடுகள் அறிவிப்பு! முக்கிய செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் கோவிட் பரவலால் ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து பிரிவுகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
அத்தோடு பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வசதிகளை அதிகரிப்பதற்கும், ஏனைய வைத்தியசாலைகளில் ஒட்சிசன் அளவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,