இலங்கையில் ஏராளமான கோவிட் கொத்தணிகள்! முக்கிய அறிவித்தல் - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் ஏராளமான கோவிட் தொற்று கொத்தணிகள் உருவாகி வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், பல கொத்தணிகள் தோன்றியுள்ளமையால் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் நோய் பரவுவதற்கான அறிகுறியாக இதை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, தற்போதைய சூழ்நிலையில் பொது மக்கள் சுகாதார விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,