இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறிவரும் கோவிட் தொற்று! மக்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் தற்போது அதிக ஆபத்தில் உள்ளன என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இதேபோன்ற நிலைமையை மற்ற மாகாணங்களிலும் ஏற்பட கூடும். இதன் காரணமாக பொது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் வைரஸ் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுவதை பொது மக்கள் உறுதி செய்ய வேண்டும், அவசர தேவை ஏற்பட்டால் மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டும்.
நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டு பயணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
