ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல் - செய்திகளின் தொகுப்பு
நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் பொலன்னறுவ மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுள்ளை மற்றும் மொனராகலை உட்பட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,