பிக்குவாக மாறிய காணாமல் போன மாணவன்: செய்திகளின் தொகுப்பு
புத்தளம் (Puttalam) - மதுரங்குளிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்து காணாமல் போன மாணவன் ஒருவன் கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 12 வயதான சிறுவனே இவ்வாறு பிக்குவாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டில் சண்டையிட்டு கொழும்புக்கு வந்த மாணவனை பிக்கு ஒருவர் சந்தித்தாகவும் மாணவனின் விருப்பத்திற்கிணங்க கதிர்காமம் மஹியங்கனை விகாரையின் விகாராதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |