இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய இலங்கை புறா! சீன எழுத்துக்களால் எழுந்த சர்ச்சை-செய்திகளின் தொகுப்பு
நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் படகில் இலங்கை புறா ஒன்று தஞ்சமடைந்துள்ளது.
இவ்வாறு தஞ்சமடைந்த புறாவின் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்ததால், இந்தியா அல்லது இலங்கையை சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்று பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த 15 ஆம் திகதி பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் கடற்தொழிலாளர்கள் மீன் பிடிக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், "இலங்கை யாழ்ப்பாணம் சுதன்" என்றும் தொலைபேசி எண் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது.
மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர், அதன் கீழே எம்.எப். 3209 என எழுதப்பட்டிருந்தது.
இதன் காரணமாக குறித்த புறா சீனாவால் இந்தியா அல்லது இலங்கையை உளவு பார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டாத என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
You may like this video

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
