சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள்
தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்திலும் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றிருந்தன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.
பிலவ வருட சிறப்பு பூஜையினை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் நடத்தியிருந்தார்.
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவவும், கோவிட் அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam