கிளிநொச்சியில் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு
கிளிநொச்சியில் புத்தாண்டை முன்னிட்டு கனகாம்பிகைக்குளம் தூயதமிழ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
குறித்த விளையாட்டு நிகழ்வுகளானது, நேற்று (14.04.2024) இடம்பெற்றுள்ளன.
இதன்போது, கரைச்சி பிரதேச சபை செயலாளர் எஸ். செல்வகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி வைத்துள்ளார்.
கலாச்சார விளையாட்டுக்கள்
மேலும், பெருமளவான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கொண்டாட்டத்திலும், விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்வில், சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச்சண்டை, முட்டி உடைத்தல் உள்ளிட்ட கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |