புதிய மின்சார இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்
புதிதாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு நிதியின் 2023 ஆம் ஆண்டுக்கான வட்டியை செலுத்துவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றிற்கு அறியப்படுத்தியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி நுகர்வோர் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது, இலங்கை மின்சார சபை சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் நிர்மலன் விக்னேஸ்வரன், புதிய மின்சார இணைப்புக்காக, நுகர்வோரிடம் இருந்து அறவிடப்படும் வைப்பு கட்டணத்தின் 2023ஆம் ஆண்டுக்கான 11.67 சதவீத வருடாந்த வட்டியை செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam