கோவிட் மரணங்களை அறிக்கையிடுவதில் புதிய நடைமுறை
நாட்டில் பதிவாகும் கோவிட்-19 மரணங்களை அறிக்கையிடுவதில் இதுவரையில் பின்பற்றப்பட்ட நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் கோவிட் மரணங்கள் தொடர்பில் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற மரணங்கள் மட்டுமே அறிக்கையிடப்படும் என அவர் குறிப்பிடடுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த காலங்களில் இடம்பெற்ற மரணங்கள் பற்றியும் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, எதிர்வரும் நாட்களில் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில் பதிவாகும் மரணங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.