முதல் சுற்றில் புதிய திருத்தந்தை தெரிவு செய்யப்படவில்லை
வத்திக்கானில் உள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று முடிவை எட்டவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்ஸிசின் மரணத்திற்கு பின்னர், புதிய பாப்பரசர் தெரிவுக்கான மாநாடு இன்று முதல் நாளாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
கருப்பு புகை
சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாநாட்டின் முதல் நாளில் கர்தினால்கள் ஒரு புதிய பாப்பரசரை தேர்ந்தெடுக்கவில்லை.
Black smoke emerged from the chimney over the Sistine Chapel at 21:00 on Wednesday evening, signalling that a first ballot has been held at the conclave and has concluded without the election of a Pope.https://t.co/hlmAJdskTO pic.twitter.com/AKxuUbDK2g
— Vatican News (@VaticanNews) May 7, 2025
இந்நிலையில், சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கரும்புகை வெளியேறியவுடன், செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பெரும் கூட்டத்தைச் சேர்ந்த பலர் விரைவாக வெளியேறியுள்ளனர்.