விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுயாதீன கட்சிகளின் ஒன்றியம் இது பற்றி ஊடகங்களிடம் அறிவித்துள்ளது.
புதிய அரசியல் கூட்டணியின் பெயரும் 4ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தலைமையில் புதிய அரசியல் கூட்டணி |
புதிய அரசியல் கூட்டணி
தேசிய இளைஞர் சபை வளாகத்தில் இந்த கூட்டணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கூட்டணி தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.