கண்டி மாவட்டத்தின் புதிய ஆயர் பிரதமருடன் சந்திப்பு
பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் (Valence Mendes) ஆண்டகை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை (Mahinda Rajapaksa) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றைய தினம் அலரி மாளிகையில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகைக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.