தேசியக்கொடியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வுகள்
நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியின் கொடியின்றி புதிய அமர்வொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கிடையே தற்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வின் புதிய அமர்வு எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படும் புதிய நாடாளுமன்ற அமர்வுகள்
பொதுவாக நாடாளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தேசியக் கொடியுடன் ஜனாதிபதியின் கொடியும் ஏற்றப்படுவது வழக்கமாகும்.
எனினும் தற்போது ஜனாதிபதிக்கான தனியான கொடி இ்ல்லாத காரணத்தினால் இம்முறை தேசியக்கொடி மற்றும் ஏற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திரசிங்க தெரிவித்துள்ளார்.