புதிய வாகன இலக்கத் தகடு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
புதிய வாகன இலக்கத் தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களும் நவீன தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்ட புதிய வாகன இலக்க தகடுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் எண் பலகைகள் இன்றி பல வாகனங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, கடந்த 10 வருடங்களாக மோட்டார் வாகனத் திணைக்களம் மேம்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் தயாரிக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாகன இலக்கத் தகடுகள் இன்றி உள்ள வாகனங்களுக்கு அடுத்த வாரத்திலேயே தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வாய்மொழிமூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan