புதிய சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்
மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜானக வக்கும்புர நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20.2.2024) ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தரமற்ற மருந்து இறக்குமதி
ஜானக வக்கும்புர ஏற்கனவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில் அதற்கு மேலதிகமாக தற்போது சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

தரமற்ற மருந்து இறக்குமதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து கெஹலிய ரம்புகவெல்ல குறித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் கெஹலிய ரம்புகவெல்ல வகித்திருந்த அமைச்சுப்பதவி தற்போது ஜனக வக்கும்புரவிற்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri