ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய உறுப்பினர்கள்
தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து புதிய உறுப்பினர்கள் பலர் நியமிக்கப்படவுள்ளனர்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் வேறு கட்சிகளுக்குத் தாவிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி இடைநிறுத்தியிருந்தது.
இந்நிலையில் அவர்களின் கட்சி அங்கத்துவம் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக அவர்கள் வகித்து வந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியும் தற்போது காலியாகி விட்டதாக கருதப்படுகின்றது.
புதிய உறுப்பினர்கள்
உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர் என சுமார் 1137 பேரின் கட்சி அங்கத்துவம் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இவ்வாரத்திற்குள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
