இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய திருமணம் சட்டம்
இலங்கையில், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு புதிய சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக் களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பிரஜையை இலங்கைப் பிரஜை ஒருவர் திரு மணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதேவேளை,வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை இலங்கையர்கள் பதிவுத்திருமணம் செய்து கொள்ளும் போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam