கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(30.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு விநியோகம்
இதற்கமைய ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றில் சராசரியாக 1,500 கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.
20,000 ரூபாய் அபராதம்

இதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.
மேலும், ஒரு வருடத்திற்குள் கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri