இன்று முதல் இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய வாகனங்கள்
பெப்ரவரி 02ஆம் திகதியன்று, அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதை அடுத்து, இன்று இலங்கைக்கு வாகனங்களின் முதல் இறக்குமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட, இன்று (26) இறக்குமதியாகும் அனைத்து புதிய வாகனங்களும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய வாகனங்களின் வருகை
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகேயின் தகவல்படி, தாய்லாந்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு, இன்று முதல் வாகனங்கள் வந்து சேரும் அதே வேளையில், ஜப்பானில் இருந்து மற்றொரு வாகன கப்பல், எதிர்வரும் வியாழக்கிழமை (27) அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு வந்து சேரவுள்ளது.
இந்த வாகன இறக்குமதிகளுக்கு நான்கு அடுக்கு வரி விதிக்கப்படும், இதில், வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு இறக்குமதி வரி, சொகுசு வரி, சுங்க வரி மற்றும் செலவு, காப்பீடு மற்றும் தற்போதுள்ள 18 tPjவெட் வரி ஆகியவை அடங்கும்.
இந்தநிலையில், முன்னர் குறிப்பிட்டது போல, நுகர்வோர் அடுத்த திங்கள் (மார்ச் 3) முதல் வாகனங்களை, காட்சி அறைகளில் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, புதிய வாகனங்களின் வருகையைத் தொடர்ந்து, நாட்டில் தற்போதுள்ள இரண்டாவது தர வாகன சந்தை 10 முதல் 15 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மானகே கூறியுள்ளார்.
சில வாகன வகைகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்றாலும், மற்றவைகளின் விலை, உள்ளூர் சந்தையில் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய இறக்குமதி விலை
புதிய இறக்குமதிகளுடன் சுசுகி வேகன் ஆர் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தம் புதிய சுசுகி வேகன் ஆர் 7 மில்லியன் முதல் ரூ. 7.2 மில்லியன் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அதே நேரத்தில் மற்ற வேகன் ஆர் வாகனங்கள் 6 மில்லியன் மற்றும் 7 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்படும்.
டொயோட்டா விட்ஸ் உற்பத்தியாளரால் நிறுத்தப்பட்டுள்ளது, ஜப்பானிய ஒல்டோவின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அதன் புதிய இறக்குமதி விலை 3.5 மில்லியன் முதல் 5 மில்லியன் வரை இருக்கும். இரட்டை கேப் வாகனங்களை பொறுத்தவரை, டொயோட்டா ஹிலக்ஸ் ரோக்கோ டபுள் கேப் இலங்கையில் 24.5 மில்லியன் முதல் 25.5 மில்லியன் வரை விலை வரம்பில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து டொயோட்டா லங்கா, அதன் பரந்த அளவிலான புத்தம் புதிய வாகனங்களுக்கான புதிய விலையை அறிவித்துள்ளது.
இறக்குமதித் தடையை நீக்கி..
திருத்தப்பட்ட விலையானது, மாற்று விகிதங்கள், வரிகள், அரசாங்க வரிகள் மற்றும் வரிகளில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, டொயோட்டா லைட் ஏஸ், வெட் வரி உட்பட 7.45 மில்லியன் என்ற மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்படும்.
டொயோட்டா லேண்ட் குரூஸர் 300, வெட் உட்பட அதிகபட்ச விலையான 118 மில்லியனுக்குக் கிடைக்கும்.
இதேவேளை, இறக்குமதித் தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை அமுல்செய்ய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan
